ரயில் வருவதுக் கூடத் தெரியாமல் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.
செல்பி மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த செல்பி மோகத்தால் அபாயகரமான பகுதிகளில் மக்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து தங்களின் இன்னுயிரை இழக்கின்றனர். இவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்திற்கு பேரிழப்பாக இருக்கும் என்பதை உணராமலேயே இருப்பதுதான் பெரிய சோகம்.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பாண்டியன், விஜய் ஆகிய 2 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அணைப்பாளையம் பகுதியில் திருப்பூர் -கோவை செல்லும் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டு செல்பி எடுக்க முயற்சித்தனர்.
அப்போது அந்த தண்டவாளத்தில் ரெயில் வருவதை அறியாத 2 பேரும் செல்பி எடுத்துக் கொண்டிருந்து போது ரெயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் ரயில் நிலைய இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு பிழைப்பை தேடி வந்து கும்பல் கும்பலாக வசித்து வருகின்றனர். ஊர் விட்டு ஊர் சென்ற மகன் திரும்பி வருவான் என்று காத்திருக்கும் பெற்றோரையோ, கணவனுக்காக காத்திருக்கும் மனைவியையோ, தகப்பனுக்காக காத்திருக்கும் குழந்தைகளையோ நினைவில் வைத்து பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.
செல்பி எடுக்க சென்ற உயிரை மாய்த்துக் கொண்ட 2 வட மாநில இளைஞர்களின் குடும்பங்களின் நிலைமை இனி என்னவாகுமோ என்று அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…