மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வு முறையில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. வினாத்தாள் கசிவு, தேர்வு முறையைச் சுற்றிய சர்ச்சைகள் மற்றும் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானதாக, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50 சதவீத வெயிட்டேஜ் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், ஒரே நுழைவுத் தேர்வின் மதிப்பெண்ணை மட்டும் சார்ந்திருக்கும் தற்போதைய முறை மாற்றமடையலாம்.
புதிய பரிந்துரைகளின்படி, நுழைவுத் தேர்வுகள் பள்ளிப் பாடத்திட்டத்துடன் மேலும் இணைக்கப்படும். இதனால் கோச்சிங் மையங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு பல முறை தேர்வு எழுதும் வாய்ப்பு, எதிர்காலத்தில் கணினி அடிப்படையிலான Adaptive On-Demand தேர்வு முறை உள்ளிட்ட மாற்றங்களும் ஆய்வில் உள்ளன. தற்போது பிளஸ்-2 தேர்வில் தகுதி மதிப்பெண் பெறுவது மட்டுமே கட்டாயமாக இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் அதே மதிப்பெண்கள் இறுதி தரவரிசையிலும் முக்கிய பங்கு வகிக்கலாம். இதன் மூலம் ஆண்டு முழுவதும் மாணவர்கள் வெளிப்படுத்திய கல்வித் திறனுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் தற்போது நிபுணர் குழுவின் ஆய்வில் உள்ளன. இதுவரை மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. குழுவின் இறுதி அறிக்கையை ஆய்வு செய்த பிறகே சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், ஒரே நாள் தேர்வு அழுத்தம் குறைவதோடு, பள்ளிக் கல்விக்கும் சமமான முக்கியத்துவம் கிடைக்கும் என கல்வி நிபுணர்கள் கருதுகின்றனர். அதுவரை தற்போதைய NEET மற்றும் JEE சேர்க்கை முறையே தொடரும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…