பிப்ரவரியில் பிரைவேட் பஸ் – சென்னையில்…

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.

முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை அருகிலுள்ள பகுதிகளுடன் இணைக்க அரசு ஏற்கனவே மினி பேருந்துகளை இயக்கி வருகிறது. ஜூன் 14, 2024 அன்று தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு அதன்படி மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய பயண அட்டையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களுக்கு மினி பேருந்து இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேலும், வரைவு திட்ட அறிக்கையில் மினி பேருந்துகள் அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை இயக்க அனுமதிக்கப்படும் என்றும், அதில் 18 கி.மீ சேவை இல்லாத வழித்தடங்களிலும், ஏற்கனவே சேவையில் உள்ள வழித்தடங்களிலும் எட்டு கி.மீ தூரம் வரை இயக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவிர ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் இருக்கை வசதி இருக்க வேண்டும் என்றும், ஜிபிஎஸ் வசதிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மினிபஸ் வரைவு திட்ட அறிக்கை குறித்து பொதுமக்கள் 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஜூலை 22, 2024 அன்று தலைமை செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான ஆட்சேபனைகளும் கூட்டத்தில் எழுப்பப்பட்டன.

தற்போது பிப்ரவரி முதல் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

மேலும் சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக உயர்த்த வேண்டும்; அவற்றில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொதுப்போக்குவத்துப் பயன்பாட்டை அதிகரித்து, சென்னையில் மகிழுந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அதன் வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். இதை நோக்கி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இப்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

சென்னை ஒன் செயலியில் ரூ.1 டிக்கெட் ஆஃபர்; பேருந்து, மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…

2 hours ago

கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…

2 weeks ago

தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…

2 weeks ago

தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

2 weeks ago

“ஏஐ நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது” – கங்கை அமரன் வேதனை

சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…

3 weeks ago

சித்தராமையா ராஜினாமா: “வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என விளக்கம்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…

3 weeks ago