கர்நாடகாவில் அன்ன பாக்யா உத்தரவாதத்தை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு தடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அன்ன பாக்யா திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டது.
ஜூன் 23ம் தேதியன்று இந்த அறிவிப்பு வெளியான நிலையில், ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட இருந்த திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு வழங்கும் ஐந்து கிலோவுக்கு மேல் BPL கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மாதத்திற்கு சுமார் 2.29 லட்சம் மெட்ரிக் டன்கள் கூடுதலாக அரிசி தேவைப்படும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் அன்ன பாக்யா உத்தரவாதத்தை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு தடுத்து வருவதாகவும், எத்தனை தடைகள் வந்தாலும் கர்நாடக மக்களுக்கு மாநில அரசின் 10 கிலோ இலவச அரிசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஏழைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வாக்குறுதி அளிக்கப்பட்டாலும் பாஜகவிற்கு வாக்களிக்காமல் இருந்ததற்காக மக்களை பிரதமர் மோடி தண்டிக்கிறார் எனவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடகா மக்களுக்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளித்த அன்ன பாக்யா திட்டத்தை செயல்படுத்த விடாமல் இடையூறு செய்வதையே இலக்காக கொண்டு மோடி அரசு செயல்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…