தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து Master Certification in Bridal Makeup Artistry மற்றும் Diploma in Creative Hair Dressing & Chemical Treatment பயிற்சிகளை வழங்க உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாகவும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். இந்த பயிற்சி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான நபர்களுக்கான தங்குமிடம் மற்றும் இதர செலவுகள் அனைத்தையும் தாட்கோ ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு, பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப கட்ட மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பெறும் வாய்ப்பும் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பின்னர்…