சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்திற்கு தானே முழு பொறுப்பு என மத்திய கல்வி அமைச்சர் Dharmendra Pradhan தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அனைத்து புகார்களும் ஆய்வு செய்யப்படும். ஏதேனும் முறைகேடு கண்டறியப்பட்டால் யாரும் தப்ப முடியாது” என உறுதியளித்தார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். விடைத்தாள்களின் ஸ்கேன் பிரதிகள் தெளிவாக இல்லை, சில விடைகள் சரிபார்க்கப்படாமல் விடப்பட்டுள்ளன, இணையதளம் அடிக்கடி செயலிழக்கிறது, மறுமதிப்பீட்டு நடைமுறையில் குழப்பம் உள்ளது என்பன முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
இதற்கு பதிலளித்த சிபிஎஸ்இ, “OSM முறை உலகளவில் பயன்படுத்தப்படும் நவீன மதிப்பீட்டு முறை. இது வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை அதிகரிக்கும்” என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறித்து திருப்தியில்லையெனில் மறுகூட்டல், விடைத்தாள் நகல் பார்வை மற்றும் மறுமதிப்பீடு கோரலாம் என தெரிவித்துள்ளது.
மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் இலவச ஆலோசனை சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1800-11-8004 என்ற எண்ணிலும் resultcbse2026@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பின்னர்…
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருப்பது விவசாயிகளிடையே…
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்திய பெண்களுக்கு வழங்கப்படும் “துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது”க்கான…
போபாலில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 வயதான த்விஷா சர்மா வழக்கில் சட்டப் போராட்டம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. இரண்டாவது…