நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மதுரை மாவட்டத்தில் மர்நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, கருவேலம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம், பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதும் அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. நெல்லை மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே விரோதிகள் உள்ளதால் அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கிருஷ்ணகுமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…