நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மதுரை மாவட்டத்தில் மர்நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, கருவேலம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம், பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பதும் அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. நெல்லை மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே விரோதிகள் உள்ளதால் அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கிருஷ்ணகுமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…