மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாத பிறப்பினை முன்னிட்டு தட்சிணாயன புண்ணிய காலம் துவங்குவதையட்டி மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தங்கத்தேரில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை, நிவேதனம், ஆரத்தியும், மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது,
இதைத்தொடர்ந்து மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தியுடன் கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…