மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தட்சிணாயன புண்ணிய காலத்தை முன்னிட்டு தங்கத்தேரில் சுவாமி திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாத பிறப்பினை முன்னிட்டு தட்சிணாயன புண்ணிய காலம் துவங்குவதையட்டி மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தங்கத்தேரில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது.
காலை 5.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை, நிவேதனம், ஆரத்தியும், மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது,
இதைத்தொடர்ந்து மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தியுடன் கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…