அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டதில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்ட தொடர் பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முதல் கூட்ட தொடர் நிறைவு பெற்றது.
இந்நிலையில் பட்ஜெட் அமர்வின் இரண்டாம் பகுதி மார்ச் 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இது தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதே பிரச்சனை காரணமாக அடுத்தடுத்து 2 நாட்கள் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், 4வது நாளான இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழக எம்பிக்கள் கார்த்தி ப.சிதம்பரம், திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர் கையில் பதாகைகள் ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…