சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் 85 வயதான வையாபுரி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்தமகன் இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது மகனுடன் துரைராஜூடன் வையாபுரி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே 3 செண்ட் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மகனின் மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் கோவில் பண்டிகைக்காக சென்ற நிலையில், தந்தை மகனுக்கு இடையே சொத்து குறித்து மீண்டும தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற தந்தை வையாபுரி, வீட்டின் அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் துரைராஜை சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்னர் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலுடன் வையாபாரி கெங்கவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…