சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் 85 வயதான வையாபுரி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்தமகன் இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது மகனுடன் துரைராஜூடன் வையாபுரி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே 3 செண்ட் நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து மகனின் மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் கோவில் பண்டிகைக்காக சென்ற நிலையில், தந்தை மகனுக்கு இடையே சொத்து குறித்து மீண்டும தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற தந்தை வையாபுரி, வீட்டின் அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் துரைராஜை சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதன் பின்னர் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலுடன் வையாபாரி கெங்கவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…