சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான தேங்காய் சுடும் திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கொண்டாடினர். புதுமணத் தம்பதியரும் தலை ஆடி மாதத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் ஆடிமாதம் முதல் தினத்தை ஆண்டுதோறும் மிகவும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சி மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஆடி 18ம் தேதியன்று முடிவுக்கு வந்தது என்றும் அதனை நினைவுகூரும் வகையில் ஆடி முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளான அரிசிபாளையம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய் சுடும் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மக்கள் தங்கள் வீடுகள் முன்பாக அவல், பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை, எள்ளு உள்ளிட்ட இனிப்பு பொருட்களால் நிரப்பிய தேங்காயை தீயில் சுட்டு, பின்னர் உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் திருமணமான புதுமண தம்பதிகளும் புத்தாடை அணிந்து ஜோடியாக தேங்காய் சுட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…