பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த செயல் கொடூரமான செயல் என்றும், இந்த சம்பவம் பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாக காங்கிரÞ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் பிரவேஸ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு அகில இந்திய காங்கிரஸ் ஆதிவாசி பிரிவு தலைவர் சிவாஜிராவ் மோஹே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரவேஸ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுவன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் கொடூரமான செயலாகும் என்றும் இது பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், நாடு முழுவதும் பழங்குடி இன மக்களை தவறாக நடத்துவதையும் இந்த சம்பவத்தையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் கொடூரமான செயலை கண்டித்து வரும் நாளை, நாளை மறுதினம் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…