பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த செயல் கொடூரமான செயல் என்றும், இந்த சம்பவம் பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாக காங்கிரÞ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பழங்குடி இன சிறுவன் மீது பாஜக பிரமுகர் பிரவேஸ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு அகில இந்திய காங்கிரஸ் ஆதிவாசி பிரிவு தலைவர் சிவாஜிராவ் மோஹே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிரவேஸ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுவன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் கொடூரமான செயலாகும் என்றும் இது பாஜகவின் மனிதாபிமானமற்ற பக்கத்தை காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், நாடு முழுவதும் பழங்குடி இன மக்களை தவறாக நடத்துவதையும் இந்த சம்பவத்தையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் கொடூரமான செயலை கண்டித்து வரும் நாளை, நாளை மறுதினம் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…