மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் படி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது தொடர்பான பயிற்சிவழங்குதல் மற்றும் பள்ளிகளில் சேகரமாகும் கழிவுகளை பள்ளியிலேயே எவ்வாறு உரமாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக, காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்தனர். சோழவந்தான் பேரூராட்சியினை கழிவுகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றிட பள்ளி மாணவ மாணவியர்களின் கூட்டு முயற்சியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், கவுன்சிலர்கள் சத்திய பிரகாஷ் ,கொத்தாலம் செந்தில் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பள்ளி தாளாளர் முதல்வர் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…