தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், கடல் அட்டை போன்றவை கடத்தபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து இன்று அதிகாலை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பெரியபட்டினம் தெற்கு புது குடியிருப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இலங்கைக்கு செல்ல இருந்த படகு ஒன்றை சோதனை இட்டபோது அதில் 12 பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய பட்டினத்தை சேர்ந்த முகமது மீராசா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதிவு எண் இல்லாத அந்த படகை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து புதுமடம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…