தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், கடல் அட்டை போன்றவை கடத்தபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து இன்று அதிகாலை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பெரியபட்டினம் தெற்கு புது குடியிருப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இலங்கைக்கு செல்ல இருந்த படகு ஒன்றை சோதனை இட்டபோது அதில் 12 பெட்டிகளில் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய பட்டினத்தை சேர்ந்த முகமது மீராசா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பதிவு எண் இல்லாத அந்த படகை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து புதுமடம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…