முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோடு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும்போது பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர் என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்தார்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு கட்டட இறுதி கட்டட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ. வேலு 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக கட்டிடத்திற்கு 60 கோடி மதிப்பீட்டில் புத்தகம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நூலகத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும் 15ம் தேதி திறந்து வைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே மதுரை சட்டமன்ற தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலைகளை தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மண்டல தலைவர் பாண்டிசெல்வி, உதவி ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…