முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோடு எடப்பாடி பழனிச்சாமியை ஒப்பிடும்போது பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதியற்றவர் என அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்தார்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு கட்டட இறுதி கட்டட பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ. வேலு 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக கட்டிடத்திற்கு 60 கோடி மதிப்பீட்டில் புத்தகம் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நூலகத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும் 15ம் தேதி திறந்து வைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே மதுரை சட்டமன்ற தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட ஃபேவர் பிளாக் சாலைகளை தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மண்டல தலைவர் பாண்டிசெல்வி, உதவி ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…