உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குருகிராம் பகுதியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
10 முறை எம்எல்ஏவாகவும் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். 1989 முதல் 1991 வரையிலும், 1993 முதல் 1995 வரையிலும், 2003 முதல் 2007ம்ஆண்டு வரையிலும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்து வந்தவர். 1992ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கியு சமாஜ்வாதி கட்சி பிரதான கட்சிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. முலயா சிங் யாதவ்வின் மகன் அகிலேஷ் யாதவும் உத்தர பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய அரசியலிலும் முலாயம் சிங் யாதவ் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேதாஜி என்று உ.பி. மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ் நெருக்கடி காலங்களில் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். அவரது 2வது மனைவி சாதனா குப்தா கடந்த ஜூலை மாதம் காலமானார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…