தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காந்தி சிலை முன்பு மறுமலர்ச்சி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ரவி விரோதமாக செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல்களை கண்டித்தும், அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்குமாறும் இந்திய குடியரசு தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர்மன்ற துணைத் தலைவர் குணா, மாவட்ட இணை செயலாளர் சரவணன், கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…