தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காந்தி சிலை முன்பு மறுமலர்ச்சி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ரவி விரோதமாக செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் செயல்களை கண்டித்தும், அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்குமாறும் இந்திய குடியரசு தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர்மன்ற துணைத் தலைவர் குணா, மாவட்ட இணை செயலாளர் சரவணன், கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…