மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இனக்கலவரத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் வலியுறுத்தினார்.
மணிப்பூர் வன்முறை குறித்து இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தியும், மத்திய டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் உள்ள அனைத்து தீவிரவாத குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்திய இளைஞர் காங்கிரசார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து மணிப்பூர் அரசு மற்றும் மாநில முதலமைச்சருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என கூறி முழக்கம் எழுப்பியதால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…