மதுபோதை ஆசாமி ஒருவர் தனக்கு நீதி வேண்டும் எனக் கூறி உடைந்த மதுபாட்டிலை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரியான இவர் மது அருந்திவிட்டு பழைய பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தை மடக்கி தகராறு செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான வடக்கு காவல்துறையினர் சங்கரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் அடங்காத அவர், மீண்டும் மது குடித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மதுபாட்டிலை உடைத்து திடீரென்று தன் கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டில் விடுத்தார். தனக்கு நீதி வேண்டும் என்று தற்கொலை மிரட்டல் விடுத்த சங்கரை போலீசார் லாவகமாக பிடித்து கைது செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்ட போதை ஆசாமி நீதிமன்ற வளாகம் முன்பு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…