மதுபோதை ஆசாமி ஒருவர் தனக்கு நீதி வேண்டும் எனக் கூறி உடைந்த மதுபாட்டிலை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்தவர் சங்கர். கட்டிட மேஸ்திரியான இவர் மது அருந்திவிட்டு பழைய பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தை மடக்கி தகராறு செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான வடக்கு காவல்துறையினர் சங்கரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் அடங்காத அவர், மீண்டும் மது குடித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மதுபாட்டிலை உடைத்து திடீரென்று தன் கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டில் விடுத்தார். தனக்கு நீதி வேண்டும் என்று தற்கொலை மிரட்டல் விடுத்த சங்கரை போலீசார் லாவகமாக பிடித்து கைது செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஏற்கனவே எச்சரித்து அனுப்பப்பட்ட போதை ஆசாமி நீதிமன்ற வளாகம் முன்பு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…