ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளை போன்று தமிழகத்திலும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தய சாலையில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நடை பயிற்சியினை மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருவதாகவும், 38 வருவாய் மாவட்டங்களில் எட்டு கிலோமீட்டர் நடை பாதை அமைக்கப்பட்டு மரம், இருக்கை போன்றவற்றை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளில் 8 கிலோமீட்டர் தூரம் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி ரெகுலர் ரூமிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…