அதிமுக பொதுக்குழு முடிவு தொடர்பாக வந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியாக செயல்படும் என மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் பேட்டி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பதவி செல்லாது என்றும் முன்பிருந்த ஒருங்கிணைப்பாளர் இணை, ஒருங்கிணைப்பாளர் நடைமுறையே தொடரும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் நிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளர் அவர் கூறும் போது, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் வகையில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும் புரட்சித்தலைவர், தலைவியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் என்று தெரிவித்தார். மேலும், அண்ணா திமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் நீதியரசர் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார் எனவே இந்தத் தீர்ப்பை புரட்சித்தலைவியின் ஆன்மாவும், புரட்சித்தலைவருடைய ஆன்மாவும் இணைந்து கொடுத்த வழிகாட்டுதலாகவே நாங்கள் பார்க்கிறோம் என கூறினார். மேலும் இந்த தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியானது அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் வெற்றியாக தான் பார்க்க வேண்டும் என கூறிய கோபாலகிருஷ்ணன், மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகிறோம் என தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…