பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் மது கடைகள் இருப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்து அவை மூடப்படும் என மது விலக்கு மற்றும் ஆய்த்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை, வீட்டு வசதி மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதை அடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கலைஞர் மருத்துவ காப்பீடு அட்டைகளையும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை, அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை ஆய்வு செய்ய உள்ளோம் என்றும், அதன் பிறகு அந்த கடைகளை அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…