பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் மது கடைகள் இருப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்து அவை மூடப்படும் என மது விலக்கு மற்றும் ஆய்த்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை, வீட்டு வசதி மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதை அடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கலைஞர் மருத்துவ காப்பீடு அட்டைகளையும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை, அகற்றுவது குறித்து பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை ஆய்வு செய்ய உள்ளோம் என்றும், அதன் பிறகு அந்த கடைகளை அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…