தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உறுதியாக உள்ளது என தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அமலாக்கத்துறை மூலம் எத்தனை சோதனைகள் நடத்தினாலும் எவரும் அஞ்சப்போவதில்லை என கூறினார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் ஒற்றுமையையும் கண்டு சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசு, அமலாக்கத்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி விமர்சித்தார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டதற்கு கண்டனம் தெரிவித்த கே.எஸ். அழகிரி, விசாரணை என்ற போர்வையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறையை ஏவி, விசாரணை என்ற பெயரில் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய மத்திய அரசு, தற்போது அமைச்சர் பொன்முடியை குறிவைத்து அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…