கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தலைமைக் காவலர் சபரிகிரி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஜோதி நகர் பகுதிகளில் கடந்த 27ம் தேதி நடந்து சென்ற இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். ஒரே நாளில் இரு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்ததுக்கு சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறித்த நபர் இறுதியாக தனியார் மதுபான கூடத்திற்கு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது கோவை போத்தனூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சபரிகிரி என்பது தெரிய வந்தது மற்றும் அவர் பணிபுரிந்து வந்த செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து எட்டு சவரன் நகை மீட்கப்பட்டு கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…