கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தலைமைக் காவலர் சபரிகிரி போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஜோதி நகர் பகுதிகளில் கடந்த 27ம் தேதி நடந்து சென்ற இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். ஒரே நாளில் இரு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்ததுக்கு சென்று சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறித்த நபர் இறுதியாக தனியார் மதுபான கூடத்திற்கு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது கோவை போத்தனூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சபரிகிரி என்பது தெரிய வந்தது மற்றும் அவர் பணிபுரிந்து வந்த செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து எட்டு சவரன் நகை மீட்கப்பட்டு கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…