ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவிபட்டினம் மாரியம்மன் கோவில் வடக்கு பகுதியில் உள்ள அயூப்கான் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 45 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அயூப்கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என்று தெரிகிறது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…