மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறுவது வழக்கமாக உள்ள நிலையில், பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையும் காட்டைவிட்டு வெளியேறியது. அதன் பின்னர் குடியிருப்புக்குள் புகுந்த பாகுபலி யானை விவசாய நிலங்களில் நடமாடி பயிர்களை நாசம் செய்தது.
இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியே வந்த யானையை வனத்துறையினர் விரட்டிக கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மர்ம நபர்கள் சிலர் பட்டாசு வீசி யானையை துன்புறுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் குறிப்பாக நந்தவனப்புத்துர் பகுதியில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட துப்பாக்கி போல் இருக்கும் கருவியில் உள்ளே உலோகத்தை வைத்தும் யானை தாக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரிகள், நெல்லிதுறையைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற விவசாயி யானையை தாக்கியது தெரியவந்தது. அவரை பிடித்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…