மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறுவது வழக்கமாக உள்ள நிலையில், பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையும் காட்டைவிட்டு வெளியேறியது. அதன் பின்னர் குடியிருப்புக்குள் புகுந்த பாகுபலி யானை விவசாய நிலங்களில் நடமாடி பயிர்களை நாசம் செய்தது.
இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியே வந்த யானையை வனத்துறையினர் விரட்டிக கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மர்ம நபர்கள் சிலர் பட்டாசு வீசி யானையை துன்புறுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் குறிப்பாக நந்தவனப்புத்துர் பகுதியில் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட துப்பாக்கி போல் இருக்கும் கருவியில் உள்ளே உலோகத்தை வைத்தும் யானை தாக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரிகள், நெல்லிதுறையைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற விவசாயி யானையை தாக்கியது தெரியவந்தது. அவரை பிடித்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…