ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் திடீர் என தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மணல் விலை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் அவிநாசியில் கனி மெட்டல் மார்ட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஈரோட்டிற்கு தனது காரில் கடை ஊழியர்களுடன் வந்துள்ளார்.
அப்போது ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி வழியாக வந்த போது காரில் புகை வந்துள்ளது. இதைக் கண்டு ராஜலிங்கம், ஊழியர்கள் ஜெயராமன், அருண்குமார், மூர்த்தி, செளந்தர பாண்டியன் ஆகியோர் காரை விட்டு இறங்கித் தப்பித்தனர்.
உடனடியாக கார் தீ பற்றி எரிய தொடங்கியதுடன் காரில் இருந்து கரும் பூகை வெளியேறியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அனைத்தனர்.
இந்த சம்பவத்தால் பெருந்துறையில் இருந்து கோவை, திருப்பூர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…