கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டிய காடுகளில் 184 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக வனத்துறையினர் தெரித்துள்ளனர்.
கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 402 சதுர கிலோமீட்டரில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பட்டாம்பூச்சிகளை இனம் கண்டறிய வனத்துறை சார்பில் கோடைகால கணக்கெடுப்பு முகாம் நடைபெற்றது.
இதற்காக பூதப்பாண்டி , வேளிமலை, அழகியபாண்டியபுரம், குலசேகரம், களியல் வனச் சரகங்களில் 5 இடங்கள் கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட வனப்பகுதியில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்ட தில் 184 பட்டாம்பூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தூரிகை கால் பட்டாம் பூச்சி இனங்கள் 67 உள்ளன. ப்ளூஸ் , ஸ்கிப்பர்கள் , வெள்ளை மற்றும் மஞ்சள், ஸ்வாலோடெயில்கள் ஆகியவையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 328 பட்டாம் பூச்சி இனங்கள் உள்ளன. காமன் செலியூட் ப்ளூ இன பட்டாம்பூச்சி தமிழகத்தில் பார்ப்பது மிக அரிதாகும். இந்த வண்ணத்துப்பூச்சி தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…