ராமநாதபுரத்தில் வீட்டில் வைத்து வளர்க்கப்பட்ட 10 பச்சைக்கிளிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றின் உடல்நிலையை சரிபார்த்த பின் வனத்தில் சுதந்திரமாக பறக்கவிடப்பட்டன.
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி பச்சைக்கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக்கிளி, நீலப் பைங்கிளி, மரகத புறா, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, பனங் காடை, கவுதாரி மற்றும் வன உயிரினங்களை வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் தங்கள் வசம் உள்ள வன உயிரினங்களை அருகில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான காலக்கெடு கடந்த 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பச்சைக்கிளிகளை வனத்துறையினர் நன்கு பராமரித்து உரிய உடல்நலத்துடன் உள்ளதை உறுதி செய்தபிறகு வனப்பகுதியில் பறக்க விட்டனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…