வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் தனது சாவிற்கு 5 பேர் காரணம் என கூறியுள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு அடுத்த கார்கூரை சேர்ந்த சங்கீதா என்பவர், அதே பகுதியில் துணைத்தலைவராக உள்ள மணிமாறன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சங்கீதா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த நிலையில், அவரிடம் பணம் வாங்கிய பலர் அசலும், வட்டியும் தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த சங்கீதா, யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்த பிரச்சனை குறித்து கணவரிடம் தெரிவித்தபோதும் அவரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்ட செல்வி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. இதனால் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது அவர் மின்விசிரியில் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பேர்ணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கீதா உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தன்னுடைய மரணத்திற்கு 5 பேர் காரணம் என்றும் அவர்கள் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்றும் சுவற்றில் எழுதிவைத்துவிட்டு சங்கிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் சுவற்றில் எழுதி வைத்த, அம்மு, விஜயகாந்த், சரவணன், வெங்கடேசன், சரிதா ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…