உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில் விவசாயி பஞ்சராஜா-சாந்தி தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி சாந்தியை தலையில் பலத்த படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் பஞ்ச ராஜா அழைத்து சென்றார். மருத்துவர்கள் சாந்தியை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் பஞ்சராஜாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சராஜாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி சாந்தியை பஞ்சராஜா கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…