உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில் விவசாயி பஞ்சராஜா-சாந்தி தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி சாந்தியை தலையில் பலத்த படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் பஞ்ச ராஜா அழைத்து சென்றார். மருத்துவர்கள் சாந்தியை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் பஞ்சராஜாவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சராஜாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி சாந்தியை பஞ்சராஜா கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…