மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் முதன்மை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காந்திகிராம பல்கலைக்கழகத்தின் வேதியல் துறை பேராசிரியர் முனைவர் சேதுராமன் தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்க சவால்கள் குறித்து உரையாற்றினார். கருத்தரங்கின் போது , ஆசிரியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர். இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் மீனாட்சிசுந்தரம் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வேதியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…