திருப்பூரில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் வெளியூர் செல்ல இரவு 8 மணியில் இருந்தே பேருந்துகள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகள் அரசுப் போக்குவரத்து அலுவலர்களை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் முறையால் பதில்தரவில்லை எனக்கூறி பயணிகள் தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சமரசப் பேச்சில் ஈடுபட்டதோடு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். எனினும் இரவு 12 மணிவரை பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், அரசுப்
பேருந்துகள் இயக்கப்படாதால் தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் அதிகம் கேட்பதாக வேதனை தெரிவித்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…