திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் சுற்றுவட்டாரமான தண்டலம், ஆலத்தூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல தலைமுறைகளாக அந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலங்கள் தவறாக கோயில் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, பட்டாவை விவசாயிகள் பெயரில் மாற்ற கோரி பல போராட்டங்களும் நடைபெற்றன.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 230 ஏக்கர் நிலங்கள் கோயில் நிர்வாகத்தால் மீட்கப்பட்டு, அந்த இடங்களில் கோயில் சொத்து என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
ஆனால் தற்போது மழைக்கால சாகுபடிக்காக விவசாயிகள் ஏர் ஓட்டி உழவு பணிகளை தொடங்கியுள்ளனர். இதையடுத்து கோயில் நிர்வாகம், அனுமதியின்றி விவசாயம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த விவசாயம்தான் எங்களின் குடும்ப வாழ்வாதாரம். நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை குறைந்தபட்சம் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவித்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…