குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக செய்தி வெளியிட்ட பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவரை கைது செய்யக்கோரி குன்றத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பாஜக பிரமுகர் சுரேஷ் என்பவர் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு இருந்தார். இதை கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பாஜக பிரமுகர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணி சார்பில் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட வர்த்தக தூறை தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு பாஜக பிரமுகர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…