திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார்.
அப்போது அவர் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கவேண்டும் எனவும் தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக 15 ஆயிரம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் நுகர்வோர்துறை அமைச்சர் பியூஸ் கோயலை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதலாக உணவு பொருட்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…