மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 28ம் தேதி விக்னேஷ்வர பூஜை, தீர்த்த அலங்காரத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 6 மணிக்கு ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், காயத்திரி ஹோமம் நடந்தது. ஆகஸ்ட் 29ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும், ஆகஸ்ட் 30ம் தேதி 4, 5ம் கால பூஜையும், ஆகஸ்ட் 31ம் தேதி காலை 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
ஆகஸ்ட் 31ம் தேதி காலை 7 மணிக்கு கும்ப பூஜை முடிந்து வேதமந்திரங்கள், மேள, தாளம் முழங்க புனித நீர் உள்ள கும்பங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9.20 மணிக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், பி.ஆர்.கிரானைட்ஸ் உரிமையாளருமான பி.ராஜசேகரன் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முப்புலி சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில செயலாளர் நாராயனன், மாவட்ட தலைவர் பழனி, துணை செயலாளர் பழனிவேல், செயற்குழு உறுப்பினர் வீராசாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கஷ்டங்கள் தீரும் என நம்பி வந்த ஏராளமான பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…