விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மடத்துபட்டி பகுதியில் உள்ள அருகாமைப்பள்ளி அமைப்பும், சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு அமைப்பும் இணைந்து, நாட்டின் 75வது சுதந்திர அமுதப் பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் படிப்பு, விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.
க.மடத்துப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மடத்துப்பட்டி ஆரம்பப்பள்ளியின் 3ம் வகுப்பு மாணவி ரக்சிதா, சுதந்திரப் போராட்ட வீரர்கள் 150 பேர்களின் பெயர்களை அச்சுப்பிசகாமல் கூறி அசத்தினார். இந்த சாதனையை செய்த மாணவி ரக்சிதாவிற்கு டிரம்ப் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ததுடன் அதற்கான உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் தாயில்பட்டி, மடத்துப்பட்டி, நதிக்குடி பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளி மாணவிகள் 75 பேர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட 75 தலைவர்களின் வேடங்கள் அணிந்து வந்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிகளை சிவகாசி முகநூல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் சிவகாசி எம்எல்ஏ அசோகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் சூரியா, சேவுகன், மாமன்ற உறுப்பினர் ராஜேஷ், தாசில்தார் லோகநாதன், வருவாய் ஆய்வாளர் விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜெயமேரி நன்றி கூறினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…