Categories: GOVT/POLITICS

மகிழ்ச்சியுடன் பள்ளி செல்ல வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதாதால் பள்ளிகள் திறப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்ததாலும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

 அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கோடை விடுமுறையில் சொந்த ஊர், உறவினர்கள் வீடு, விளையாட்டு என சந்தோஷமாக சுற்றித் திரிந்த மாணவர்கள் கொஞ்சம் வருத்தத்துடனும், அதிகம் மகிழ்ச்சியுடன் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.

முதல் நாள் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் செய்து கொடுத்துள்ளன. இதேபோல் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆனதால் அதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில்வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற பள்ளி

இதற்கிடையே ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளை சிவப்பு கம்பளங்கள் விரித்து பூக்களை கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் “நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்.” என்று உறுதி மொழி அளித்துள்ளார்.

திருப்பூரில் மேள தாளத்துடன் வரவேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை பள்ளியின் முகப்பில் திருவிழா போல வாழைமரம் கட்டி, நாதஸ்வர, மேள இசை முழங்க ரோஜாப்பூ வழங்கி பள்ளியின் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வரவேற்றனர். மேலும் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் இருபுறமும் வரிசையில் நின்று கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…

1 week ago

தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…

1 week ago

தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

1 week ago

“ஏஐ நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது” – கங்கை அமரன் வேதனை

சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…

2 weeks ago

சித்தராமையா ராஜினாமா: “வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என விளக்கம்

கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…

2 weeks ago

சிபிஎஸ்இ பிளஸ் 2 டிஜிட்டல் மதிப்பீட்டு சர்ச்சை: பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதான்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…

2 weeks ago