விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று காலை 6.30 மணியிலிருந்து பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது. இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். நாளை ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணியில் இருந்தே, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல், மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், அதிகாலையிலேயே வனத்துறை முகப்பு வாயிலில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஞாயிறு கிழமையன்று விடுமுறை நாளாக இருப்பதால், அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…