கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 118வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தமிழ் மொழிக்காக பாடுபட்டவர், சுதந்திர வேட்கை கொண்டவர் மா.பொ.சிவஞானம் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…