கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து, தீட்சிதர்கள் வைத்த பதாகையை காவல்துறை உதவியுடன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அகற்றினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என எழுதிய அறிவிப்பு பலகையை, ஆலய தீட்சிதர்கள் வைத்துள்ளனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதனை தொடர்ந்து, நடராஜர் கோவிலுக்கு, சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கனகசபை மேல் பக்தர்கள் ஏறக்கூடாது என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை உதவியுடன், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் வைத்த பதாகையை அகற்றினர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…