அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபடுத்த பிரதமர் மோடிக்கு போதுமான நேரம் உள்ளது. ஆனால் ஆயுதப்படைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லையா என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
நாள் தோறும் தேசியம் பற்றி பேசுபவர்கள் நமது ஆயுதப்படைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, அக்னிபாத் திட்டம் என்பது நமது ராணுவ வீரர்களுக்கு வழங்க மோடி அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது என கூறியுள்ளார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தலில் பாதுகாப்பு சமூகத்திற்கு மோடி அரசு துரோகம் இழைத்துள்ளதாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 2-ல் பெரிய அளவிலான முரண்பாடுகளைத் தூண்டுவதன் மூலம், நமது ராணுவத்தினரிடையே பிளவை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…