அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவுபடுத்த பிரதமர் மோடிக்கு போதுமான நேரம் உள்ளது. ஆனால் ஆயுதப்படைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லையா என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
நாள் தோறும் தேசியம் பற்றி பேசுபவர்கள் நமது ஆயுதப்படைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, அக்னிபாத் திட்டம் என்பது நமது ராணுவ வீரர்களுக்கு வழங்க மோடி அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது என கூறியுள்ளார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தலில் பாதுகாப்பு சமூகத்திற்கு மோடி அரசு துரோகம் இழைத்துள்ளதாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 2-ல் பெரிய அளவிலான முரண்பாடுகளைத் தூண்டுவதன் மூலம், நமது ராணுவத்தினரிடையே பிளவை உருவாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…