திருவள்ளூரில் தாய் கொல்லப்பட்ட வழக்கில் அவரது 2 மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சேகர்-மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜேஷ், ரஞ்சித் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தாய் மஞ்சுளாவுக்கும், 2-வது மகன் ரஞ்சித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் மஞ்சுளா மூத்த மகன் ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு தேடி வந்த தாய்க்கு அடைக்கலம் தராமல் மூத்த மகனும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் மஞ்சுளா காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக இளைய மகனுக்கு சரத் என்ற நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். ராஜேஷ் வீட்டிற்கு விரைந்த ரஞ்சித், நண்பர் உதவியுடன் மஞ்சுளாவை திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மகன்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மூத்த மகன் ராஜேஷ் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…