பி.எஸ்.சி கம்யூனிகேஷன் ஹெல்த் படித்தவர்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Bsc கம்யூனிகேஷன் ஹெல்த் மருத்துவ பட்டம் பெற்றவர்களான மதுரையை சேர்ந்த பாலு உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் நாங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Bsc கம்யூனிகேஷன் ஹெல்த் என்கிற மருத்துவ பட்டம் பெற்றுள்ளோம். எனவே எங்கள் பெயர்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கம் நிராகரித்து விட்டது. எனவே மருத்துவ கவுன்சில் நிராகரித்த கோரிக்கையை ரத்து செய்து எங்களது பெயர்களையும் அச்சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…