பி.எஸ்.சி கம்யூனிகேஷன் ஹெல்த் படித்தவர்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Bsc கம்யூனிகேஷன் ஹெல்த் மருத்துவ பட்டம் பெற்றவர்களான மதுரையை சேர்ந்த பாலு உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் நாங்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Bsc கம்யூனிகேஷன் ஹெல்த் என்கிற மருத்துவ பட்டம் பெற்றுள்ளோம். எனவே எங்கள் பெயர்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகளை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கம் நிராகரித்து விட்டது. எனவே மருத்துவ கவுன்சில் நிராகரித்த கோரிக்கையை ரத்து செய்து எங்களது பெயர்களையும் அச்சங்கத்தில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…