மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, குமரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வன்முறையால், இதுவரை 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, காங்கிஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் காங்கிரÞ தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு, மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த போராட்டத்தில், நகர தலைவர் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…