மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் பேரிடர்கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி பேரிடர் மேலாண்மை ஒத்திகை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமா தலைமை வகித்து உரையாற்றினார். மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலை வைத்தார். வாடிப்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். சோழவந்தான் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஆற்றில் தவறுதலாக இறங்கி விழும் நபரை மீட்பது பற்றிய டெமோ செய்து காண்பித்தனர். மேலும்.முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து சுகாதாரத் துறையினர் விளக்கம் அளித்தனர். இதில் வருவாய் அலுவலர்கள் சோழவந்தான் சுப்புலட்சுமி, தென்கரை சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் திருவேடகம் ஜெயபிரகாஷ், மேலக்கால் மாசாணம், மற்றும் தென்கரை உள்கோட்டம், சோழவந்தான் உள்கோட்ட வருவாய் அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேஸ்வரி வீரபத்திரன் பழனி ஊராட்சி செயலாளர்கள் விக்னேஷ் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, உக்கிரபாண்டி சிக்கந்தர் பாண்டி உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…