மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பணிகளை கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் ராம் நகர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாலையில் குழிகள் இருப்பதால், பாதி அளவுக்கு சாலையை மறைத்து போக்குவரத்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் இந்த வழியே ஆம்புலன்ஸ் கூட அவசரத்திற்கு சாலையை கடந்து செல்ல முடியவில்லை. குறிப்பாக, நேற்று இரவு ஒரு அவசரகால ஊர்தி போக்குவரத்து நெரிசலில் சிக்கி பின் சுமார் 15 நிமிட தாமதத்துக்கு பின் கடந்து சென்றது. வானமாமலை நகர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை கடுமையான நெரிசல் ஏற்படுவதால், இதனைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக போக்குவரத்து காவல்துறையினரை அந்த இடத்தில் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்கள் சிரமம் இன்றி பயணிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…