குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, வேளாங்கண்ணி ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என, தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.
வேளாங்கண்ணி செல்ல புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டு கொண்ட விஜய் வசந்த், குமரி மாவட்டத்தில் கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததை போல, மதுரை புனலூர் ரயில், ஆரல்வாய் மொழி, பள்ளிப்பாடி, குழித்துறை மேற்கு போன்ற ரயில் நிலையங்களில் நிறுத்தம் வேண்டும என கேட்டு கொண்டார்.
இதேபோல், நாகர்கோவில் கோட்டயம் ரயில், நாகர்கோவில் டவுன், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்ட விஜய் வசந்த், புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலை, குமரி மாவட்டம் வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…