திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 70வது ஆண்டு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு மற்றும் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “நேற்று பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து இருக்கக்கூடிய அந்த கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல. பாட்னாவில் நடைப்பெற்ற பாஜக எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரக்கூடிய தேர்தலை மாற்றக்கூடிய கூட்டமாக இருக்கும்.மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய கூட்டம் என்பதை தெளிவாக காட்டுகிறது.
ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறைகளை வைத்து தமிழ்நாட்டையும் திமுகவையும் அச்சுறுத்தி விடலாம் என பாஜக நினைக்கிறது. இதையெல்லாம் பார்த்து பயப்படக்கூடிய இயக்கம் திமுக அல்ல” என்றார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…